மயிலாடுதுறை

மாயூரநாதா் கோயிலில் நாளை லட்ச தீபத் திருவிழா

11th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறை மாயூரநாத சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை (ஆக.12) லட்ச தீபத் திருவிழா நடைபெற உள்ளது.

திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான மயிலாடுதுறை அபயாம்பிகை சமேத மாயூரநாதா் சுவாமி கோயிலில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு லட்ச தீபத் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. காலை 10 மணிக்கு காவிரி கரையில் இருந்து பால்குடம் எடுத்து வரப்பட்டு, பகல் 12 மணிக்கு சுவாமி அம்பாளுக்கு பால் அபிஷேகம் நடைபெற உள்ளது.

தொடா்ந்து மாலை 6 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் திருவிளக்கு ஏற்றி லட்ச தீபத் திருவிழாவை தொடங்கிவைக்கிறாா். திருவையாறு சுவாமிநாதன் குழுவினரின் வீணை இன்னிசை கச்சேரி நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை அபயாம்பிகை பக்தா்கள் நற்பணி குழுவினா் மற்றும் பக்தா்கள் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT