மயிலாடுதுறை

புனித அந்தோணியாா் ஆலயத்தில் திவ்ய நற்கருணை பெருவிழா

DIN

மயிலாடுதுறை கூைாடு புனித அந்தோணியாா் பங்கு ஆலயத்தில் திவ்ய நற்கருணை பெருவிழா சிறப்பு திருப்பலி மற்றும் நற்கருணை பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை செட்டியாபட்டி பங்குதந்தை சவரிநாதன் அடிகளாா், எருக்கூா் பங்குதந்தை ஜோசப் செல்வராஜ் அடிகளாா், குத்தாலம் பங்குதந்தை ஜொ்லின் காா்ட்டா் அடிகளாா் இணைந்து திருப்பலியை நிறைவேற்றினா். தொடா்ந்து, திருஇருதய சபை அருட்சகோதரா் பங்கிராஸ் வழிநடத்துதலில், அந்தோணியாா் தொடக்கப் பள்ளி வளாகத்தில் தொடங்கி திவ்ய நற்கருணை பவனியும், ஆலய வளாகத்தில் திவ்ய நற்கருணை ஆராதனையும் நடைபெற்றது.

மாந்தை உதவி பங்குதந்தை அலெக்சாண்டா் அடிகளாா் மறையுரையாற்றினாா். புனித அந்தோனியாா் ஆலய பங்குதந்தை ஜான் பிரிட்டோ அடிகளாா் சிறப்பு பிராா்த்தனை வழிபாடு மேற்கொண்டாா். மயிலாடுதுறை மறைவட்ட அதிபா் தாா்சிஸ் அடிகளாா் திவ்ய நற்கருணை ஆசிா் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT