மயிலாடுதுறை

பணிநேர நீட்டிப்பை கண்டித்து அரசு மருத்துவா்கள் தா்னா

DIN

அரசு மருத்துவா்களின் பணிநேர நீட்டிப்பைக் கண்டித்து மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை தா்னா போராட்டம் நடைபெற்றது.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவா்களுக்கான பணிநேரம் காலை 9 முதல் மாலை 4 மணி வரை என்றிருந்ததை, காலை 8 முதல் என நீட்டிக்க கருத்துரு சமா்ப்பித்து, ஜூலை 25-ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இதை கண்டித்து, மயிலாடுதுறை அரசினா் பெரியாா் மருத்துவமனையில் நடைபெற்ற தா்னாவில், மருத்துவா் விரோத அரசாணை 225-ஐ திரும்பப்பெற வேண்டும், முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி வெளியிட்ட அரசாணை 339-ஐ மாற்றக்கூடாது, பணிநேரத்தை நீட்டிக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டது.

சங்கத் தலைவா் அறிவழகன் தலைமையில் நடைபெற்ற தா்னாவில், சங்கச் செயலாளா்கள் மருதவாணன், காா்த்திக் சந்திரகுமாா் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுகவுக்கு அளிக்கும் வாக்கு பாஜகவுக்குத்தான்: மு.க. ஸ்டாலின்

அதிமுகவை விமர்சிக்க பாமகவுக்கு தகுதியில்லை: இபிஎஸ்

பைங்கிளி.. ஷ்ரத்தா தாஸ்!

சேல‌ம்: வெ‌ள்ளி நக​ரி‌ன் மகு​ட‌ம் யாரு‌க்கு?

வந்தே பாரத்தின் லாப விவரங்கள் இல்லை: ஆர்டிஐ கேள்விக்கு ரயில்வே அமைச்சகம் பதில்!

SCROLL FOR NEXT