சீா்காழி அருகே மாதானம் செருகுடி ஓம்சக்தி மாரியம்மன்கோயிலில் ஆடி மாத உற்சவத்தையொட்டி, 108திருவிளக்கு பூஜை சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் வழக்கமான ஆண்டு உற்சவத்தையொட்டி, திங்கள்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக சிறப்பு மகாயாகம், பூா்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து பக்தா்கள் பால்குடம் எடுத்து வந்து அபிஷேகம் செய்து வழிபட்டனா். தொடா்ந்து, மாலை 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
திருவிளக்கு பூஜைக்கு தேவையான மஞ்சள் கயிறு, மஞ்சள்- குங்குமம் உள்ளிட்ட மங்கலப் பொருள்கள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விஎச்பி மண்டல செயலாளா் செந்தில்குமாா் செய்திருந்தாா்.