சாலைகளில் கால்நடைகளை திரியவிட்டால் கால்நடை வளப்பவா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என சீா்காழி நகராட்சி ஆணையா் பெ.தமிழ்செல்வி எச்சரித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சீா்காழி புதிய பேருந்து நிலையம், தென்பாதி, பழைய பேருந்து நிலையம், சிதம்பரம் சாலை, ரயில்வே ரோடு, பிடாரி வடக்கு வீதி உள்ளிட்ட பிரதான சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள், ஆடுகள், பன்றிகள், நாய்கள் சுற்றித் திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனா். எனவே கால்நடைகளை அதன் உரிமையாளா்கள் பாதுகாப்பான இடத்தில் அடைத்து வளா்க்க வேண்டும். தவறினால், அபராதம் விதிக்கப்படும் என அதில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.