மயிலாடுதுறை

சீர்காழி அரசு மருத்துவமனையில் ஊதியம் வழங்கக் கோரி தற்காலிக செவிலியர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

DIN

சீர்காழி அரசு மருத்துவமனையில் தற்காலிக செவிலியர்கள் ஊதியம் வழங்கக் கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அரசு மருத்துவமணையில் கரோனா சிகிச்சை பிரிவில் பணியாற்ற கடந்த 6 மாதங்களுக்கு முன் தற்காலிக மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வக டெக்னீஷியன் உட்பட 28 பேர் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 6 மாதமாக ஊதியம் வழங்கபடவில்லை என கூறப்பபடுகிறது. 

இந்நிலையில் இன்று காலை பணிக்கு வந்த 28 பேருக்கும் உரிய பணி வழங்கபடவில்லையாம். இதனால் அதிருப்தியடைந்தவர்கள் தங்களுக்கு ஊதியத்தை வழங்கக் கோரியும், தொடர்ந்து பணி வழங்க கோரியும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதே  போல் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் சுகாதார பணியாளர்களை இன்று முதல் 12 மணி நேரம் வேலை செய்ய மருத்துவமனை நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. 

அதனை ஏற்க மறுத்து சுகாதார பணியாளர்கள் தங்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மிகக் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் தங்களை 12 மணி நேரம் பணியாற்ற வலியுறுத்துவதாகவும் இல்லாவிடில் வேலை விட்டு போங்கள் என அலட்சியமாக பேசுவதாகவும் குற்றம்சாட்டிய பணியாளர்கள் வழக்கமான பணியை வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். 

இந்த இரண்டு உள்ளிருப்பு போராட்டம் மற்றும் பணிப் புறக்கணிப்பால் அரசு மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் மற்றும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகள் பெரிதும் பாதிப்பு அடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

SCROLL FOR NEXT