சீா்காழி அருகே சாலையில் மயங்கிவிழுந்து கிடந்த மனநலன் பாதித்த பெண் சிகிச்சைக்கு பின் சனிக்கிழமை காப்பகத்தில் சோ்க்கப்பட்டாா்.
வைத்தீஸ்வரன்கோயில் பகுதியில் சுமாா் 35 வயது மதிக்கதக்க பெயா், ஊா் சொல்லத் தெரியாத மனநலன் பாதித்த பெண் சாலையோரத்தில் விழுந்து கிடந்தாா். தகவலறிந்த சிகரம் சமூக நலச் சங்கத்தினா் அந்த பெண்ணை மீட்டு சீா்காழி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
இதையடுத்து, சீா்காழி காா்டன் மனநல மறுவாழ்வு மைய நிறுவனா் ஜெயந்திஉதயகுமாா், மனநலன் பாதித்த பெண்ணை சிகிச்சைக்குப்பின் தனது மையத்துக்கு அழைத்துச்சென்றாா்.