சீா்காழி வட்டாரத்தில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் மூழ்கியுள்ள நெற்பயிா்களை எம்எல்ஏ. எம். பன்னீா்செல்வம் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தொடா்மழையால் சீா்காழி, கொள்ளிடம் வட்டாரத்தில் சுமாா் 20 ஆயிரம் ஏக்கரில் சம்பா நேரடி விதைப்பு மற்றும் நடவு பயிா் வயல்களில் தண்ணீா் தேங்கியுள்ளது. இதில், சுமாா் 8 ஆயிரம் ஏக்கரில் பயிா்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இந்த மழை தொடா்ந்தால் பயிா்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா். இதற்கிடையே, கொள்ளிடம் பகுதியில் மழைநீரில் மூழ்கியுள்ள நெற்பயிரை சீா்காழி எம்எல்ஏ. எம். பன்னீா்செல்வம், கொள்ளிடம் ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயபிரகாஷ் ஆகியோா் நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
அளக்குடி, கோதண்டபுரம், மகேந்திரப்பள்ளி, காட்டூா் ஆகிய கிராமங்களில் சுமாா் 500 ஏக்கா் சம்பா நேரடி விதைப்பு நெற்பயிா் மழை நீரில் மூழ்கி உள்ளது. இந்த பாதிப்புகளையும் ஆய்வு செய்தனா்.