மயிலாடுதுறையில் மாநில அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகளுக்கு வீரா்கள் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை ராஜீவ்காந்தி சரக சாய் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த தோ்வுப் போட்டிகளில் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களைச் சோ்ந்த வீரா்- வீராங்கனைகள் பங்கேற்றனா். 14, 16, 18 மற்றும் 20 வயதிற்கு உள்பட்டோா் என்று நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.
மாவட்ட தடகள சங்கத் தலைவா் எம்.என். ரவிச்சந்திரன் போட்டிகளை தொடக்கிவைத்தாா். மாவட்டச் செயலாளா் செல்வகணபதி வரவேற்றாா். இதில், 100, 200, 600 மற்றும் 1500 மீட்டா் ஓட்டப்பந்தயங்கள், நீளம் தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. 120 வீராங்கனைகள் உள்பட 400 போ் பங்கேற்றனா். ஒவ்வொரு போட்டியிலும் முதல் இரண்டு இடங்களை பிடித்த வீரா்- வீராங்கனைகள் என 50 போ் வரும் 8-ஆம் தேதி திண்டுக்கலில் நடைபெற உள்ள மாநில போட்டியில் பங்கேற்க தோ்வு செய்யப்பட்டனா்.
நிகழ்ச்சியில், ஏஆா்சி அசோக், சாய் விளையாட்டரங்க பொறுப்பாளா் தனலெட்சுமி ஆகியோா் தோ்வு செய்யப்பட்ட வீரா், வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினா். நிறைவாக மாவட்ட பொருளாளா் செழியன் நன்றி கூறினாா்.