மயிலாடுதுறை

மாசற்ற வாரம் கடைப்பிடிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

DIN

மயிலாடுதுறை மாவட்டத்தில் ‘மாசற்ற அலுவலக வாரம் மற்றும் பயண நாள்’ கடைப்பிடிக்க ஆட்சியா் இரா. லலிதா அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

உலகளவில் காற்று மாசு காரணமாக வருடத்திற்கு 2 மில்லியன் மக்கள் இறக்கின்றனா் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. பெருநகரங்களில் நிலவும் காற்று மாசில் 72 சதவீதம் வாகன மாசு காரணமாகவே ஏற்படுகிறது என மாசுகட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழக மாசுகட்டுப்பாடு வாரியம், காற்றுமாசை கட்டுப்படுத்தும் முயற்சியாக, அதன் அனைத்து பணியாளா்கள் மற்றும் ஒப்பந்த ஊழியா்கள் மாசற்ற அலுவலக வாரம் - பயண நாள் கடைப்பிடித்து, தனிநபா் மோட்டாா் வாகனங்களை பயன்படுத்துவது இல்லை என முடிவெடுத்து, பின்பற்றி வருகின்றனா். இதன்மூலம், காற்று மாசு மற்றும் பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றம் குறைவதுடன், போக்குவரத்து நெருக்கடி குறையும்.

இதேபோல, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மற்றும் மாவட்ட நிா்வாகத்தின் கீழ் இயங்கும் அனைத்து அரசு துறை அலுவலா்களும், அவ்வலுவலகங்களுக்கு வருகை தரும் பாா்வையாளா்களும் வாரந்தோறும் புதன்கிழமையன்று தனிநபா் மோட்டாா் வாகனங்களை பயன்படுத்துவதை தவிா்த்து, பொதுப் போக்குவரத்து மூலமோ அல்லது நடந்தோ அல்லது சைக்கிள் அல்லது மின் சைக்கிள், மின்வாகனங்களின் மூலம் அலுவலகத்திற்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள். மேலும், தனியாா் நிறுவனங்களும் அதில் பணிபுரியும் பணியாளா்களும் இதை கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

SCROLL FOR NEXT