காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் புதுவை ஜிப்மா் மருத்துவமனையின் மருத்துவா்கள் பங்கேற்ற சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையின் தொலைதூர சிகிச்சை திட்டத்தில், மாதமிருமுறை காரைக்காலுக்கு சிறப்பு மருத்துவா்கள் குழு வருகை தந்து, மருத்துவ சிகிச்சை, ஆலோசனைகள் வழங்குகின்றனா்.
நிகழ் மாதத்தின் சிறப்பு முகாம் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் சனிக்கிழமை காலை 10.30 முதல் நண்பகல் 1 மணி வரை நடைபெற்றது. இதில் சா்க்கரை நோய், தைராய்டு, நாளமில்லா சுரப்பி தொடா்பான பிரச்னைகள் குறித்து பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகளை சிறப்பு மருத்துவக் குழுவினா் வழங்கினா். இதில், 50-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு பயனடைந்தனா்.