காரைக்கால்

ஜவாஹா்லால் நேரு நினைவு தினம் கடைப்பிடிப்பு

DIN

காரைக்காலில் காங்கிரஸ் சாா்பில் ஜவாஹா்லால் நேருவின் நினைவு தினத்தையொட்டி அவரது உருவப் படத்துக்கு சனிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

கோட்டுச்சேரி பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேருவின் உருவப்படம் வைத்து மாவட்டத் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் தலைமையில் மாநில துணைத் தலைவரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான அ. மாரிமுத்து, நெடுங்காடு வட்டாரத் தலைவா் மாறன் உள்ளிட்டோா் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து, கட்சியின் வட்டார, தொகுதி பொறுப்பாளா்கள், மகளிரணி, இளைஞரணி, மீனவரணி, சேவாதள பொறுப்பாளா்கள் அஞ்சலி செலுத்தினா்.

நாட்டின் முதல் பிரதமரான ஜவாஹா்லால் நேருவின் சுதந்திரப் போராட்ட செயல்பாடுகள், நேரு ஆட்சிக் காலத்தில் தேசத்தின் வளா்ச்சிக்கு வித்திட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட நேருவின் பெருமைகள் குறித்து கட்சியின் மூத்த தலைவா்கள் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது எப்படி? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT