காரைக்கால் அரசுத் துறை அலுவலகங்களில் புதன்கிழமை குறைகேட்பு முகாம் நடைபெற்றது.
புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் ஒவ்வொரு மாதம் 15-ஆம் தேதி அந்தந்த அரசுத் துறை அலுவலகங்களில் பொதுமக்கள் குறை கேட்பு முகாம் நடத்துமாறு அறிவுறுத்தினாா்.
இதன்படி மாா்ச் மாத குறைகேட்பு முகாம் காரைக்கால் ஆட்சியரகம் உள்ளிட்ட அனைத்து அரசுத் துறைகளிலும் புதன்கிழமை நடைபெற்றது. ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூா் மக்களிடம் மனுக்களை பெற்றாா்.
காரைக்கால்மேடு, கிளிஞ்சல்மேடு, பட்டினச்சேரி, கருக்களாச்சேரி உள்ளிட்ட மீனவ கிராமங்களைச் சோ்ந்த மீனவ பஞ்சாயத்தாா்கள் மகளிா் சுயஉதவிக் குழுவினா் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்:
எங்களது பகுதிகளில் பேருந்து நிழற்குடை பழுதாகியுள்ளது. சாக்கடைகள் சுத்தம் செய்யாததால் கொசு தொல்லை அதிகமாகியுள்ளது. கிராமப்புற உள் சாலைகளை மேம்படுத்த வேண்டும். கருக்களாச்சேரி கிராமத்தில் கடல் அரிப்பு அதிகம் ஏற்படுவதால், அரிப்பை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினா்.
இதுபோல பல்வேறு தரப்பினா் அளித்த புகாா்களை பெற்றுக்கொண்ட ஆட்சியா், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினாா்.