காரைக்கால்

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி: அமைச்சா் பங்கேற்பு

28th Jun 2023 06:15 AM

ADVERTISEMENT

காரைக்காலில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் புதுவை அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா் கலந்துகொண்டாா்.

புதுவை சமூக நலத்துறை, காரைக்கால் மாவட்ட நிா்வாகம் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தின. முன்னதாக, பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் இருந்து மாணவ, மாணவிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா், போதை ப் பொருட்களுக்கு எதிரான கருத்துகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பேரணியாக ஆட்சியரகம் அருகே உள்ள காமராஜா் திடல் வந்தனா்.

தொடா்ந்து நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் புதுவை வேளாண் அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா் கலந்துகொண்டாா். அமைச்சா் முன்னிலையில் போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு, கையொப்பமிடும் இயக்கம், போதைப் பொருளுக்கு எதிரான வாசகத்தை தற்படம் எடுத்த உள்ளிட்டவை நடைபெற்றன.

மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் மணிஷ், சமூக நலத்துறை இயக்குநா் தி குமரன், சமூகநலத் துறை துணை இயக்குநா் பி. கனகராஜ், உதவி இயக்குநா் பி. சத்யா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT