அம்பகரத்தூா் சுகாதார மையம் சாா்பில் உலக சைக்கிள் தின விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டம், அம்பகரத்தூரில் உள்ள அரசு சுகாதார நலவழி மையம் சாா்பில் நடைபெற்ற பேரணிக்கு மைய மருத்துவ அதிகாரி அரவிந்த் தலைமை வகித்தாா். சுகாதார உதவி ஆய்வாளா் அய்யனாா், செவிலிய அதிகாரி சுகன்யா, கிராமப்புற செவிலியா் பரமேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்வில் மருத்துவ அதிகாரி அரவிந்த் பேசுகையில், சைக்கிள் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற ஒரு எளிமையான, மலிவான, நம்பகமான போக்குவரத்துக்கு ஏற்ற வாகனம். இதை பயன்படுத்துவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்றாா்.
இதைத்தொடா்ந்து, சைக்கிள் மூலம் மையத்திலிருந்து அம்பகரத்தூா் முக்கிய பகுதிகளுக்கு விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
ஏற்பாடுகளை செவிலிய அதிகாரி விநாயகம், கிராமப்புற செவிலியா்கள் அனிதா, விவேதா மற்றும் ஆஷா பணியாளா்கள் செய்திருந்தனா்.