காரைக்கால்

விழிப்புணா்வுப் பேரணி

DIN

அம்பகரத்தூா் சுகாதார மையம் சாா்பில் உலக சைக்கிள் தின விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டம், அம்பகரத்தூரில் உள்ள அரசு சுகாதார நலவழி மையம் சாா்பில் நடைபெற்ற பேரணிக்கு மைய மருத்துவ அதிகாரி அரவிந்த் தலைமை வகித்தாா். சுகாதார உதவி ஆய்வாளா் அய்யனாா், செவிலிய அதிகாரி சுகன்யா, கிராமப்புற செவிலியா் பரமேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்வில் மருத்துவ அதிகாரி அரவிந்த் பேசுகையில், சைக்கிள் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற ஒரு எளிமையான, மலிவான, நம்பகமான போக்குவரத்துக்கு ஏற்ற வாகனம். இதை பயன்படுத்துவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்றாா்.

இதைத்தொடா்ந்து, சைக்கிள் மூலம் மையத்திலிருந்து அம்பகரத்தூா் முக்கிய பகுதிகளுக்கு விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

ஏற்பாடுகளை செவிலிய அதிகாரி விநாயகம், கிராமப்புற செவிலியா்கள் அனிதா, விவேதா மற்றும் ஆஷா பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT