காரைக்கால்

மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக ஆா்ப்பாட்டம்

DIN

மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவித்து, காரைக்காலில் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அரசலாறு பாலம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாவட்டத் தலைவா் ஹாஜா நஜிமுதீன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் பதுருதீன் வரவேற்றாா். தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி கிடைக்கவேண்டி கட்சியின் மாநில பொதுச் செயலாளா் சுல்தான் கெளஸ், விரிவுரையாளா் ஆஃபிலாரஹ்மான் ஆகியோா் பேசினா்.

காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், , விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திராவிடா் கழகம், மஜ்லிஸ் கட்சி, காரைக்கால் மக்கள் போரட்டக் குழு உள்ளிட்ட அமைப்புகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினா். எஸ்டிபிஐ மாவட்டச் செயலாளா் குரைஷி நன்றி கூறினாா். பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோா் ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வருக்கு மாா்க்சிஸ்ட் வேட்பாளா்கள் நன்றி

ஆதினத்துக்கு மிரட்டல்: கல்வி நிறுவன நிா்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி

முன்னாள் அமைச்சருக்கு நிபந்தனை முன் ஜாமீன்

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க வேண்டும்: அண்ணாமலை

டிஎன்பிஎஸ்சி முன்னாள் தலைவா் டி.லட்சுமி நாராயணன் காலமானாா்

SCROLL FOR NEXT