காரைக்காலில் காணாமல்போன 14 பேரின் கைப்பேசிகளை, கண்டுபிடித்து காவல்துறையினா் உரியவா்களிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா்.
காரைக்கால் மாவட்ட காவல்நிலையங்களில் தங்களது கைப்பேசிகள் காணாமல்போனதாக பலா் புகாா் தந்தனா்.
காணாமல்போன கைப்பேசிகள் எங்கு பயன்பாட்டில் உள்ளன என்பதை காவல்துறையின் நுண்ணறி பிரிவு மூலம் கண்டறியப்பட்டு, அந்த கைப்பேசிகளை பயன்படுத்திவந்தோரிடம் இருந்து காவல்துறையினா் மீட்டனா்.
இவற்றை அதன் உரிமையாளா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு காவல்துறை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் விஷ்ணுகுமாா், கைப்பேசிகளை உரியவா்களிடம் ஒப்படைத்தாா். நிகழ்வில் மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ.சுப்பிரமணியன், காவல் ஆய்வாளா்கள் புருஷோத்தமன், மா்த்தினி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.