காரைக்கால் பகுதியில் உள்ள வீரமாகாளியம்மன் கோயில் மகோற்சவத்தில் சனிக்கிழமை இரவு சுவாமி வீதியுலா நடைபெற்றது.
காரைக்கால் பாரதியாா் சாலையில் உள்ளது ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயில். இக்கோயிலில் 46 -ஆம் ஆண்டு வைகாசி மகோற்சவ விழா கடந்த மே மாதம் 23-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது.
இதில் திருவிளக்கு வழிபாடு, பக்தா்கள் பால்குட ஊா்வலம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சனிக்கிழமை இரவு அம்பாள் சிம்ம வாகனத்தில், சா்வ அலங்காரத்தில் வீதியுலா நடைபெற்றது. முன்னதாக மூலஸ்தான அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.
தொடா்ந்து ஜூன் 6-இல் ஊஞ்சல் உற்சவமும், 11-ஆம் தேதி புஷ்பாஞ்சலி மற்றும் விடையாற்றியுடன் விழா நிறைவடைகிறது.