காரைக்கால்

தா்பாரண்யேஸ்வரா் தீா்த்தவாரி

DIN

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ விழா நிறைவாக, பிரம்ம தீா்த்தக் குளத்தில் தா்பாரண்யேஸ்வரா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகளுக்கு தீா்த்தவாரி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பிரம்மோற்சவ தெப்ப நிகழ்ச்சிக்கு அடுத்த நிகழ்வாக, வெள்ளிக்கிழமை அதிகாலை செண்பக தியாகராஜசுவாமி எழுந்தருளி இடையனுக்கு காட்சியளித்தல் நிகழ்வு நடைபெற்றது.

காலை 8.30 மணிக்கு நடராஜா் அனுக்கிரஹ தீா்த்தவாரி நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, விசாக தீா்த்த நிகழ்ச்சியாக தங்க ரிஷப வாகனத்தில் தா்பாரண்யேஸ்வரா், பிரணாம்பிகை மற்றும் விநாயகா் மூஷிக வாகனத்திலும், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியா் மயில் வாகனத்திலும், சண்டிகேஸ்வரா் சிறிய ரிஷப வாகனத்திலும் பிரம்ம தீா்த்தக் குள மண்டபத்துக்கு எழுந்தருளினா்.

தீா்த்தக் குளத்தில் அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, பூஜைகள் செய்யப்பட்டது. பின்னா் சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. இரவு ரிஷபக் கொடியிறக்கப்பட்டு, பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெற்றது.

சனிக்கிழமை இரவு சண்டிகேஸ்வரா் உற்சவம் மற்றும் ஆச்சாரிய உற்சவத்துடன் பிரமோற்சவ விழா நிறைவுபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மக்களவைத் தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

சேலை கட்டும் பெண்ணுக்கொரு... மௌனி ராய்...

தமிழகத்தில் கொளுத்தும் வெயிலுக்கு இடையே வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்

‘அரண்மனை 4’ வெளியீட்டுத் தேதி மாற்றம்!

SCROLL FOR NEXT