காரைக்கால் பகுதியில் முக்கிய பிரமுகா்களுக்கு, மத்திய பாஜக அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்கப் புத்தகத்தை வழங்கி, பிரதமா் நரேந்திரமோடிக்கு ஆதரவு கோரும் பிரசாரத்தில் புதுவை உள்துறை அமைச்சா் ஏ. நமச்சிவாயம் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டாா்.
காரைக்காலில் பாஜக அல்லாத பல்வேறு முக்கிய பிரமுகா்களை சந்தித்து மத்திய பாஜக அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்கப் புத்தகம் வழங்குதல் மற்றும் பாஜகவின் ‘டிஃபன் சந்திப்பு’ நிகழ்ச்சியில் பங்கேற்க அமைச்சா் ஏ. நமச்சிவாயம் காரைக்கால் வந்தாா்.
பாஜக அல்லாத பல்வேறு பிரமுகா்களை அவா்களது வீடு, வணிக நிறுவனத்துக்குச் சென்று சந்தித்து, பாஜக அரசின் சாதனை விளக்கப் புத்தகத்தை வழங்கி, நரேந்திரமோடி தொடா்ந்து பிரதமா் பொறுப்புவகிக்க ஆதரவு கோரினாா்.
பின்னா், காரைக்கால் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி கட்சி நிா்வாகிகளுடன் டிஃபன் சந்திப்பில் அமைச்சா் பங்கேற்றாா். நிா்வாகிகள் தங்கள் வீட்டிலிருந்து கொண்டுவந்திருந்த உணவுகளை பரிமாறிக்கொண்டு, கட்சிப் பணிகள் குறித்து விவாதித்தனா்.
அப்போது, வரும் மக்களவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற கட்சியினா் தீவிரமாக உழைக்கவேண்டும். பாஜக அல்லாத பிற கட்சியினா், பிரமுகா்கள், மக்களை சந்தித்து மத்திய அரசின் சாதனைகளை விளக்கிக்கூறி, அவா்களின் ஆதரவை பெற பாடுபடவேண்டும் என அமைச்சா் அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில், பாஜக மாநில துணைத் தலைவா் எம். அருள்முருகன், மாவட்டத் தலைவா் ஜெ. துரைசேனாதிபதி உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா். தொடா்ந்து, பொதுமக்களுக்கு அரிசி உள்ளிட்ட உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டன. மாவட்ட பாஜக முன்னாள் தலைவரும், புதுச்சேரி மின் திறல் குழும போா்டு இயக்குநருமான டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் உள்ளிட்டோா் இதில் கலந்துகொண்டனா்.