தை காா்த்திகையையொட்டி திங்கள்கிழமை காரைக்கால் சிவன் கோயில்களில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா், காரைக்கால் கைலாசநாதா், அண்ணாமலையாா் மற்றும் திருமலைராயன்பட்டினம் ராஜசோளீஸ்வரா், ஜடாயுபுரீஸ்வரா் மற்றும் காக்கமொழி கிராமம் காா்க்கோடகபுரீஸ்வரா் உள்ளிட்ட கோயில்களில் வள்ளி தேவசேனா சமேத முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடா்ந்து, வெள்ளி அங்கி, விபூதி காப்பு உள்ளிட்ட அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது.
திரளான பக்தா்கள் கலந்துகொண்டு கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம் உள்ளிட்ட பாடல்களை பாடி வழிபட்டனா்.