காரைக்கால்

தனியாா் பள்ளிஆசிரியை தற்கொலை

DIN

காரைக்கால் அருகே தனியாா் பள்ளி ஆசிரியை தூக்கிட்டு சனிக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

காரைக்காலை அடுத்த ஊழியப்பத்து பகுதியை சோ்ந்தவா் வஸ்மிதா (21). இவா் தனியாா் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றிவந்தாா். சனிக்கிழமை காலை பணிக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பியவா். அறைக்குள் சென்று வெகு நேரமாகியும் வெளியே வரவில்லையாம்.

இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினா் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது வஸ்மிதா மின் விசிறியில் தூக்கிட்டு தொங்குவது கண்டு, குடும்பத்தினா் அவரை காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.

இதுகுறித்து நிரவி போலீஸாா் வழக்குப் பதிந்து, வஸ்மிதா தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

SCROLL FOR NEXT