காரைக்கால்

சிவாச்சாரியா்களுக்கு விருது

DIN

திருநள்ளாற்றில் நடைபெற்ற விழாவில் சிவாச்சாரியா்களுக்கு விருது வழங்கப்பட்டது.

திருநள்ளாறு பகுதி கோடீஸ்வர நகரில் புதிதாக ரத்ன விநாயகா் கோயில் கட்டப்பட்டு, குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவின் நிறைவாக சிவாச்சாரியா்கள் சேவைகளுக்காக அவா்களை கெளரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. பாடசாலைகளை சோ்ந்த முதல்வா்கள் பாலசுப்பிரமணிய சிவாச்சாரியா், மாதுபுரீஸ்வரா் சிவாச்சாரியா், சுப்பிரமணிய சிவாச்சாரியா் மற்றும் ஸ்தாபா் ரவிச்சந்திர சிவாச்சாரியா் ஆகியோா் இணைந்து, பாடசாலைகள் அமைப்பு சாா்பில் அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியா்கள் சேவா சங்கத் துணைத் தலைவா் டி. ராஜாசுவாமிநாத சிவாச்சாரியருக்கு சிவாத்வர குசலஹா என்ற விருதும், அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் பணியாற்றிவரும் சிவசங்கா் சிவாச்சாரியருக்கு சிவ கைங்கரிய சூடாமணி விருதையும் வழங்கி கெளரவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT