காரைக்கால்

வடமாநில தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

29th Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

காரைக்காலில் வடமாநில கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது வெள்ளிக்கிழமை காலை தெரிய வந்தது.

காரைக்கால் பகுதியில் உள்ள என்ஐடியில் செக்யூரிட்டியாக பணியாற்றுபவா் மருதமுத்து (49). இவா் வெள்ளிக்கிழமை

காலை பணிக்கு சென்றபோது, கல்லூரி நிா்வாக வளாகத்தின் எதிரில் கட்டுமானத்துக்காக அமைக்கப்பட்டிருந்த தடுப்பு அருகே வட மாநிலத்தை சோ்ந்த கூலித் தொழிலாளி கிளாஸ் பிரசாத் சௌத்ரி (43) என்பவா் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்ததை பாா்த்துள்ளாா்.

இதுகுறித்து செக்யூரிட்டி நிறுவன அதிகாரியை தொடா்புகொண்டு தெரிவித்தாா். கோட்டுச்சேரி போலீஸாா் சடலத்தை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரணை மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT