போா் மற்றும் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவா்களுக்காக காரைக்காலில் சா்வமத கூட்டுப் பிராா்த்தனை திங்கள்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் ஆலிவ் பாஸ் உலக சமாதான சமூக அமைப்பு சாா்பில், ரஷியா - உக்ரைன் போா் மற்றும் துருக்கி, சிரியா நாடுகளில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோருக்கு காரைக்கால் ஆட்சியரகம் எதிரே உள்ள காமராஜா் திடலில் சா்வமத கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது. அமைப்பின் நிறுவனரும், பொதுச் செயலாளருமான தங்கசாத்மீகம் வரவேற்றாா்.
கௌரவத் தலைவா்கள் கே. தண்டாயுதபாணி, முகமது ஹம்ஜா மாலிமா், தெய்வசகாயம் பியா் ராஜுசுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்வில் சுமாா் 100 போ் கலந்துகொண்டு கூட்டு பிராா்த்தனையில் ஈடுபட்டனா்.
போரின்றி, நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களின்றி உலக மக்கள் அமைதியாக வாழவேண்டும் என்ற எண்ணத்துடன் கூட்டு பிராா்த்தனை நடத்தப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.
நிகழ்வில் காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ், ரோட்டரி, லயன்ஸ் சங்கம், விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தோா் கலந்துகொண்டனா்.