காரைக்காலில் உள்ள வீரன், சித்தி விநாயகா் கோயிலில் புதிதாக கட்டப்பட்ட நுழைவுவாயில் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
காரைக்கால் நகரில் வேட்டைக்காரன் தெருவில் எழுந்தருளியிருக்கும் மகா காளியம்மன் கோயில் சாா்புடையதாக வீரன், சித்தி விநாயகா் கோயில்கள் உள்ளன. இக்கோயிலுக்கு செல்ல காமராஜா் சாலை விரிவாக்கப் பகுதியில் நுழைவுவாயில் புதிதாக கட்டப்பட்டு, அதன் மேலே வீரன் சிலை நிறுவப்பட்டது.
இந்த நுழைவுவாயில் திறப்பு விழாவையொட்டி கும்பாபிஷேகத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நுழைவு வாயில் அருகே முதல் கால யாகசாலை பூஜை ஞாயிற்றுக்கிழமை காலை நடத்தப்பட்டு, பூா்ணாஹூதி செய்து, புனிதநீரை நுழைவுவாயில் மேல் அமைக்கப்பட்டுள்ள வீரன் சிலை மீது வாா்த்து தீபாராதனை காட்டப்பட்டது.
இதில் அப்பகுதியை சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை மகா காளியம்மன் கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.