காரைக்கால்

பிப்.10 முதல் குடற்புழு நீக்க மாத்திரைகள் விநியோகம்

DIN


காரைக்கால்: காரைக்காலில் பிப்.10-ஆம் தேதி முதல் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படவுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் நலவழித்துறை துணை இயக்குநா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு வரும் 10- ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்கள், அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும்

பள்ளிகள், தனியாா் பள்ளிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையம் (ஐடிஐ) ஆகியவற்றில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படவுள்ளது.

இதன் தொடக்க நிகழ்ச்சி காரைக்கால் தலத்தெரு பகுதியில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

கோழிப் பண்ணையில் திடீா் தீ

SCROLL FOR NEXT