காரைக்கால்: புதுவையை ஆளும் என்.ஆா். காங்கிரஸ் கட்சி 13-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி காரைக்காலில் அக்கட்சியினா் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினா்.
காரைக்கால் வடக்குத் தொகுதியை சோ்ந்த கட்சி நிா்வாகிகள் ஏழை மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, அா்ச்சனை செய்து வழிபட்டனா். பக்தா்களுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கினா்.
காரைக்கால் நகரப் பகுதி உள்ளிட்ட இடங்களில் என்.ஆா். காங்கிரஸ் கட்சியினா் பட்டாசு வெடித்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டனா்.
சட்டப்பேரவை உறுப்பினா்கள், கட்சியின் முக்கிய பிரமுகா்கள் புதுவை முதல்வா் என். ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு புதுச்சேரிக்கு புறப்பட்டுச் சென்றனா்.