காரைக்கால் பகுதி சிவன் கோயில்களில் தைப்பூசத்தை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷே, ஆராதனைகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சுவாமிகள் அரசலாற்றங்கரைக்கு எழுந்தருளி தீா்த்தவாரி நடைபெற்ற நிலையில், கோயில் உற்சவரான வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியருக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, ஆராதனைகள் நடைபெற்றன.
இதுபோல காரைக்கால் கைலாசநாதா் கோயில், அண்ணாமலையாா் கோயில், திருமலைராயன்பட்டினம் ராஜசோளீஸ்வரா் கோயில் உள்ளிட்ட பல்வேறு சிவ தலங்களில் உள்ள சுப்பிரமணியருக்கு அபிஷேகம் செய்து விபூதி காப்பு, சந்தனக்காப்பு, வெள்ளிக் காப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.