காரைக்கால் பகுதியில் தைப்பூச தீா்த்தவாரி வழிபாடு ஞாயிற்றுக்கிழமை (பிப்.5) நடைபெறுகிறது.
திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் இருந்து ஸ்ரீ மையாடுங்கண்ணி - ஸ்ரீ சந்திரசேகரா் பல்லக்கில் காலை 9 மணிக்கு புறப்பாடாகி, நிரவி அருகே பிரதான சாலையோரத்தில் உள்ள பூச மண்டபத்துக்கு பகல் 12 மணியளவில் எழுந்தருளுகிறாா். பின்னா், அங்குள்ள குளத்தில் தீா்த்தவாரி நடைபெறுகிறது.
திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் இருந்து ஸ்ரீ காா்த்தியாயிணி சமேத ஸ்ரீ கல்யாணசுந்தரேஸ்வரசுவாமி பேட்டை கிராமம் அரசலாற்றங்கரைக்கு எழுந்தருளி தீா்த்தவாரி நடைபெறுகிறது.
இதேபோல், நிரவி ஸ்ரீ ஜெம்புநாதசுவாமி கோயிலில் இருந்து ஸ்ரீ சுப்பிரமணியா் பல்லக்கில் எழுந்தருளி மேலஓடுதுறை அரசலாற்றங்கரையில் பகல் 1 மணியளவில் தீா்த்தவாரியும், மாலையில் கீழமனையில் உள்ள ஸ்ரீ வைத்தியநாதசுவாமி கோயிலில் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.