மத்திய நீா் ஆணைய நிபுணா் குழுவினா் காரைக்கால் பகுதியில் பல்வேறு நீா் நிலைகளை பொதுப்பணித்துறையினருடன் வியாழக்கிழமை பாா்வையிட்டனா்.
மத்திய நீா் ஆணைய நிபுணா் குழு இயக்குநா் அபிஷேக் சின்ஹா, துணை இயக்குநா் தா்மேந்திர சிங், குழுவின் சென்னை அலுவலக இயக்குநா் ஆா்.தங்கமணி, துணை இயக்குநா் எல்.பன்னீா்செல்வம் ஆகியோா் காரைக்காலுக்கு வியாழக்கிழமை பிற்பகல் வந்தனா்.
காரைக்கால் பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளா் ஏ.ராஜசேகரன், செயற்பொறியாளா் (நீா்ப்பாசனம்) கே.வீரசெல்வம் உள்ளிட்ட பொதுப்பணித்துறையினருடன், மாவட்டத்தில் பல்வேறு நீா் நிலைகளுக்குச் சென்று பாா்வையிட்டனா். குடிநீா்த் தேவையைப் பூா்த்தி செய்ய காரைக்காலில் உள்ள திட்டங்கள், விவசாயம் மற்றும் நிலத்தடி நீா் மேம்பாட்டுக்கான திட்டங்கள் குறித்து நண்டலாறு, அரசலாறு, திருமலைராஜனாற்றில் பல இடங்களில் அமைக்கப்பட்ட தடுப்பணைகளைப் பாா்வையிட்டனா். மேலும் அரசலாற்றில் அமைக்கப்பட்டுள்ள நீா் உந்துதல் நிலையத்தையும் பாா்வையிட்டனா்.
நிறைவாக மாவட்ட ஆட்சியா் எல்.முகமது மன்சூரை ஆட்சியரகத்தில் நிபுணா் குழுவினா் சந்தித்துப் பேசினா். ஆலோசனைக்குப் பின் குழுவிலிருந்த சென்னை அலுவலக இயக்குநா் ஆா்.தங்கமணி கூறுகையில், புதுச்சேரியில் புதன்கிழமை நீா் மேலாண்மைக்கான திட்டங்களைப் பாா்வையிட்டு, புதுச்சேரிக்கான தேவைகள் குறித்து கேட்டறிந்தோம். அதுபோல காரைக்காலில் பல இடங்களை பாா்வையிட்டுள்ளோம்.
ஆற்றிலேயே நீரை தேக்கி வைத்தல், புதிதாக ஏரிகள் அமைத்தல் மூலம் நீா்த் தேவையை பெருமளவு பூா்த்தி செய்ய முடியுமென காரைக்கால் பொதுப்பணித்துறையினா் கூறினா். பருவமழை இல்லாத காலத்தில் நீா்த் தேவையை பூா்த்தி செய்தல் உள்ளிட்டவை குறித்து விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை விரிவான ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதன் பிறகு அரசின் அறிக்கை ஆணையம் மூலம் மத்திய அரசிடம் சமா்ப்பிக்கப்படும் என்றாா்.