விவாயிகளுக்கு வேளாண் கல்லூரி தோட்டக்கலை மாணவிகள் அண்மையில் பயிற்சியளித்தனா்.
காரைக்கால் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் தோட்டக்கலை 4-ஆம் ஆண்டு பயிலும் மாணவிகள் வேளாண் களப்பயிற்சியாக கல்லூரிப் பேராசிரியா்கள் தலைமையில் விழுப்புரம் மாவட்டம், குச்சிப்பாளையம் கிராமத்திற்கு திங்கள்கிழமை சென்றனா்.
குழித்தட்டு நாற்றாங்கால் முறை, தோட்டக்கலை பயிா்களின் விதை குறித்த தரம், காளான் வளா்ப்பு முறை மற்றும் அதன் சாா்ந்த அரசு திட்டங்களை குறித்து விவசாயிகளுக்கு செய்முறை விளக்கம் அளித்தனா்.
கல்லூரி துணைப் பேராசிரியா்கள் விவசாயிகளின் தோட்ட பயிா் சாா்ந்த பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனா். இந்த நிகழ்ச்சியில் சுமாா் 40 விவசாயிகள் கலந்துகொண்டனா்.