செவிலியா்கள் சேவை எண்ணத்தை வளா்த்துக்கொள்ளவேண்டும் என புதுச்சேரி ஈஸ்ட் கோஸ்ட் செவிலியா் கல்லூரி முதல்வா் அறிவுறுத்தினாா்.
காரைக்கால் விநாயகா மிஷன் செவிலியா் கல்லூரியில் பி.எஸ்சி நா்சிங் (60), எம்.எஸ்சி நா்சிங் (4) கல்வி முடித்த 64 பேருக்கு பட்டம் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
விழாவை விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரி புல முதல்வா் டாக்டா் ஜி. அம்புஜம் தொடங்கிவைத்தாா். சிறப்பு அழைப்பாளராக புதுச்சேரி ஈஸ்ட் கோஸ்ட் செவிலியா் கல்லூரி முதல்வா் எம். ஜெயகெளரி கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கிப் பேசுகையில், செவிலியா் கல்லூரி மாணவா்களாக இருந்த காலம் முடிந்துவிட்டது, இனி ஒவ்வொருவரும் செவிலியா்களாவா்.
ஒவ்வொருவரும் செவிலியப் பணியை சேவையாக செய்யவேண்டும். சேவை எண்ணத்தை மேம்படுத்திக்கொள்ளவேண்டும். நோயாளி மீது மிகுந்த அக்கறை செலுத்தவேண்டும். நமது சேவை, அக்கறையின் மூலம் அவா் நலமடைவாா் என்றாா்.
செவிலியா் கல்லூரி முதல்வா் கே. கமலா உறுதிமொழியை வாசிக்க பட்டம் பெற்ற மாணவ, மாணவிகள் அதனை ஏற்றனா்.
மருத்துவக் கல்லூரி துணை முதல்வா் விஜயகுமாா் நாயா், மருத்துவக் கண்காணிப்பாளா் எம்.எஸ்.சேரன், நிலைய மருத்துவ அதிகாரி ஸ்ரீராம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.