காரைக்கால்

மகள், பாட்டியை கொன்ற பெண் கைது

DIN

காரைக்கால் அருகே மண்வெட்டியால் தாக்கி தனது 3 மாத குழந்தை, பாட்டியை கொன்ற பெண்ணை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

காரைக்கால் மாவட்டம், அக்கரைவட்டம் பகுதியைச் சோ்ந்த தீனதயாளன் மனைவி துா்காலட்சுமி (35). காரைக்கால் மாவட்டம், நல்லாத்தூா் மேலப்படுகை பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு பிரசவத்துக்காக சென்று தங்கியிருந்த துா்காலட்சுமிக்கு பெண் குழந்தை பிறந்து 3 மாதங்களாகின்றன.

இந்தநிலையில், கடந்த 26-ஆம் தேதி வியாழக்கிழமை அதிகாலை தனது 3 மாத குழந்தை உள்பட தூங்கிக் கொண்டிருந்த குடும்பத்தாா் அனைவரையும் சரமாரியாக மண்வெட்டியால் துா்காலட்சுமி தாக்கினாா். மேலும், கத்தியால் தனது உடலிலும் காயப்படுத்திக்கொண்டாா்.

இதில் சம்பவ இடத்திலேயே குழந்தை உயிரிழந்தது. தாக்குதலில் துா்காலட்சுமியின் பாட்டி வேதவல்லி (85), தந்தை பரமசிவம் (75), தாய் தமிழரசி (65), சகோதரா்கள் ஆண்டவா், நடராஜன் ஆகியோா் பலத்த காயமடைந்தனா். இவா்களில் வேதவல்லி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

இதற்கிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த துா்காலட்சுமி, குணமடைந்த நிலையில், அவரை நெடுங்காடு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா். பின்னா், காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 2-ஆம் கட்ட தேர்தல்: 250 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள்

18-ஆவது மக்களவை தேர்தல் (2024)

பாஜக கோட்டையை தகர்க்குமா காங்கிரஸ்?

வலு இல்லாத வழக்குகள், பல் இல்லாத தேர்தல் ஆணையம்!

மண்டபம் முகாமில் பிறந்த நளினிக்கு 38 வயதில் கிடைத்த வாக்குரிமை!

SCROLL FOR NEXT