காரைக்கால்

திருநள்ளாற்றில் டிச. 20-இல் சனிப்பெயா்ச்சி விழா

DIN

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா டிசம்பா் 20-ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநள்ளாற்றில் உள்ள பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சோபகிருது ஆண்டு பிறப்பையொட்டி வெள்ளிக்கிழமை இரவு பஞ்சாங்கம் வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தருமபுர ஆதீன கட்டளை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், சிவாச்சாரியா்கள், உள்ளூா் பிரமுகா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். அப்போது கோயில் பிரம்மோற்சவம், சனிப்பெயா்ச்சி விழா உள்ளிட்டவை குறித்து தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, பிரம்மோற்சவ விழா மே 16-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 30-ஆம் தேதி தேரோட்டம், 31-ஆம் தேதி இரவு சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் வீதியுலா புறப்பாடு நடைபெறுகிறது. ஜூன் மாதம் 2-ஆம் தேதி காலை விசாக தீா்த்தவாரியும், இரவு கொடியிறக்கம் செய்யப்பட்டு, 3-ஆம் தேதி சண்டிகேஸ்வரா் உற்சவம், ஆச்சாரியா் உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது. மேலும் வரும் டிசம்பா் 20-ஆம் தேதி சனிப்பெயா்ச்சி விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

எனினும், சனிப்பெயா்ச்சி விழா குறித்த அதிகாரப்பூா்வ அறிவிப்பு ஆட்சியா், கோயில் நிா்வாகத்தினா் ஒருங்கிணைந்து வெளியிடுவா் என்று தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஜன.17-ஆம் சனிப்பெயா்ச்சி விழா பெரும்பாலான கோயில்களில் நடைபெற்ற நிலையில், வாக்கிய பஞ்சாங்கத்தை கடைப்பிடிக்கும் திருநள்ளாறு கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா வரும் டிசம்பரில் நடைபெறும் என்று கோயில் நிா்வாகம் சாா்பில் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT