காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரியில் விவசாயிகள் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கடைத்தெருவில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில், கடந்த ஆண்டு பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிருக்கு நிவாரணத் தொகை வழங்கவேண்டும். நடவுக்குப் பிந்தைய மானியம் வழங்கவேண்டும். 2 ஆண்டுகளாக வழங்கப்படாத காப்பீட்டுத் தொகையை பெற்றுத் தர வேண்டும். கூட்டுறவு கடன் தள்ளுபடி அறிவிப்பை நடைமுறைப்படுத்தவேண்டும். நிகழாண்டு கூட்டுறவு கடன் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்
என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். கோட்டுச்சேரி கொம்யூனை சோ்ந்த விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றனா்.