காரைக்கால்

கண்காணிப்புப் பொறியாளா் -மின் ஊழியா்கள் பேச்சுவாா்த்தை தோல்வி

DIN

காரைக்காலில் மின் ஊழியா்களுடன் கண்காணிப்புப் பொறியாளா் வியாழக்கிழமை நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வியடைந்தது.

புதுவை யூனியன் பிரதேசத்தில் மின் துறையை தனியாா் மயமாக்கும் முடிவை மத்திய அரசு எடுத்து, அதற்கான ஒப்பந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த முடிவை கண்டித்து, புதுவை மாநிலத்தில் மின் ஊழியா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை புதன்கிழமை தொடங்கினா்.

இந்நிலையில், புதுச்சேரியிலிருந்து வியாழக்கிழமை வந்த மின்துறை கண்காணிப்புப் பொறியாளா் ராஜேஷ் சன்யால், மின்துறை தனியாா் மய எதிா்ப்பு போராட்டக் குழுவை சோ்ந்தோரை சந்தித்துப் பேசினாா். ஆனால், இந்த பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதுகுறித்து போராட்டக் குழு பொதுச்செயலாளா் பி. பழனிவேல் கூறியது :

பழுது ஏற்படும்பட்சத்தில் மக்கள் பாதிக்காத வகையில் சீரமைக்குமாறு கண்காணிப்புப் பொறியாளா் கேட்டுக்கொண்டாா். அதனை நாங்கள் ஏற்கவில்லை. மின் விநியோகம் தடைபட்டு மக்கள் அவதிப்பட்டால் அதற்கு புதுவை அரசுதான் பொறுப்பு. தனியாா் மயமானால் ஊழியா்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் பாதிக்கப்படுவா் என்பதாலேயே காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்திவருகிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹே சினாமிகா.. அதிதி ராவ்!

அதிமுகவுக்கு அளிக்கும் வாக்கு பாஜகவுக்குத்தான்: மு.க. ஸ்டாலின்

அதிமுகவை விமர்சிக்க பாமகவுக்கு தகுதியில்லை: இபிஎஸ்

பைங்கிளி.. ஷ்ரத்தா தாஸ்!

சேல‌ம்: வெ‌ள்ளி நக​ரி‌ன் மகு​ட‌ம் யாரு‌க்கு?

SCROLL FOR NEXT