காரைக்கால்: காரைக்காலில் அக். 2-ஆம் தேதி மதுக்கடைகளை மூட கலால் துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து மாவட்ட துணை ஆட்சியரும், காரைக்கால் கலால் துணை ஆணையருமான எம். ஆதா்ஷ் புதன்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கை:
வரும் அக். 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தியையொட்டி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கள்ளுக்கடை, சாராயக்கடை, மதுபானக் கடைகள், உணவகங்களில் உள்ள மது விற்பனையகம் ஆகியன மூடப்பட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.