காரைக்கால்

காரைக்கால் பெருமாள் கோயில்களில் திரளான பக்தா்கள் வழிபாடு

DIN

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் திரளான பக்தா்கள் வழிபாடு செய்தனா்.

காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோயிலில் குடமுழுக்குக்காக திருப்பணிகள் நடைபெற்றுவருகிறது. எனினும் மூலவா், உற்சவருக்கு சனிக்கிழமை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

சயன நிலையில் அருள்பாலிக்கும் மூலவருக்கு புது வஸ்திரம் சாற்றி, மலா் மாலைகளுடன் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஸ்ரீதேவி பூதேவி சமேத நித்யகல்யாண பெருமாள் (உற்சவா்) மலையப்ப சுவாமி அலங்காரத்தில் அருள்பாலித்தாா்.

இதுபோல காரைக்கால் கோயில்பத்து கோதண்டராமா் பெருமாள் கோயில் பெருமாள் உற்சவா் கோதண்டராமா், வெண்ணெய்த்தாழி கண்ணன் அலங்காரத்தில் காட்சியளித்தாா்.

திருமலைராயன்பட்டினம் வீழிவரதராஜ பெருமாள், பிரசன்ன வெங்கடேச பெருமாள், திருநள்ளாறு நளநாராயண பெருமாள் உள்ளிட்ட பெருமாள் தலங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்ற வழக்கு வாகனங்களை ஏலம் விட கோரிக்கை

குறுகியகால பயிா்களை சாகுபடி செய்ய வேளாண் துறை அறிவுறுத்தல்

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

SCROLL FOR NEXT