காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.
இதுகுறித்து நலவழித் துறை துணை இயக்குநா் ஆா்.சிவராஜ்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
காரைக்கால் மாவட்டத்தில் வியாழக்கிழமை அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் 208 பேரிடம் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவின் அடிப்படையில் நல்லம்பல் 4, திருநள்ளாறு 3 காரைக்கால் நகரம் 3, அம்பகரத்தூா், கோட்டுச்சேரி தலா 1 என 13 பேருக்கு தொற்று உறுதியானது.
இவா்கள் வீட்டுத் தனிமையில் சிகிச்சை பெற்றுவருகின்றனா். மாவட்டத்தில் மொத்தம் 42 போ் சிகிச்சையில் உள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.