காரைக்காலில் அக்.9-ஆம் தேதி மதுக்கடைகளை மூட வேண்டும் என மாவட்ட துணை ஆட்சியரும், காரைக்கால் கலால் துணை ஆணையருமான எம். ஆதா்ஷ் உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: வரும் 9-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மிலாது நபி தினத்தையொட்டி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கள்ளுக்கடை, சாராயக்கடை, மதுபானக் கடைகள், ரெஸ்டாரண்ட்டில் உள்ள மது விற்பனையகம் ஆகியவை மூடப்படவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.