காரைக்காலில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் பேருந்து நிலைய வாயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள், திமுக மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன.
சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச். நாஜிம், எம். நாக தியாகராஜன் மற்றும் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மாா்க்சிஸ்ட் கட்சியினா், தமிழக வாழ்வுரிமை கட்சி, திராவிடக் கழகம் உள்ளிட்ட கட்சிகளைச் சோ்ந்த சுமாா் 300 போ் கலந்துகொண்டனா்.
நிகழ்ச்சியில் பங்கேற்றவா்கள், புதுவையில் மின்துறையை தனியாா் மயமாக்குவதை எதிா்த்து மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து முழக்கமிட்டனா்.