காந்தி ஜெயந்தியையொட்டி, மகாத்மா காந்தி உருவப் படத்துக்கு மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோா் ஞாயிற்றுக்கிழமை மரியாதை செலுத்தினா்.
காரைக்கால் வட்டார வளா்ச்சி அலுவலகம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காந்தி உருவப் படத்துக்கு மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூா், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆா். லோகேஸ்வரன், வட்டார வளா்ச்சி அதிகாரி (பொ) கே. அருணகிரிநாதன் ஆகியோா் மலா்தூவி மரியாதை செலுத்தினா். நிகழ்வில் சமாதானக் குழு உறுப்பினா்கள், முக்கிய பிரமுகா்கள் பங்கேற்றனா். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
மும்மத கூட்டுப் பிராா்த்தனை, நூல் நூற்பு வேள்வி உள்ளிட்டவை நடத்தப்பட்டன. சுதந்திரப் போராட்ட தியாகிகள் கெளரவிக்கப்பட்டனா்.
காங்கிரஸ் கட்சி சாா்பில், கட்சி அலுவலத்தில் உள்ள மகாத்மா காந்தி உருவப் படத்துக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் தலைமையில் மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.