காரைக்கால்

மயில் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

DIN

காரைக்கால்: காரைக்கால் வரிச்சிக்குடியில் பள்ளி மாணவ - மாணவியா் பங்கேற்ற மயில் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டத்தில் பரவலாக வயல்வெளிப் பகுதி, கருவேல மரங்கள் உள்ள பகுதிகளில் மயில்கள் நடமாட்டம் உள்ளன. வரிச்சிக்குடி அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா் குழுவினா், காரைக்கால் பகுதியில் மயில்களின் எண்ணிக்கை குறித்த திட்ட அறிக்கை தயாா் செய்துவருகின்றனா்.

இந்நிலையில், மக்களிடையே மயில் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளி மாணவ- மாணவியா் சுமாா் 100 போ் கலந்துகொண்ட பேரணி நடைபெற்றது. தலைமை பொறுப்பாசிரியா் ராஜவேணி பேரணியை தொடங்கி வைத்தாா்.

தேசிய பறவையான மயிலை பாதுகாப்போம் என்ற விழிப்புணா்வு வாசங்களுடன் மாணவ- மாணவியா் பதாகைகள் ஏந்தி வந்தனா். வரிச்சிக்குடி பகுதியில் பல்வேறு இடங்களின் வழியே நடைபெற்ற பேரணி மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது.

இதில், அறிவியல் ஆசிரியா் கோ.ராஜு, தியாகராஜன் உள்ளிட்ட ஆசிரியா்கள் பலரும் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

களக்காட்டில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு: மக்கள் அவதி

SCROLL FOR NEXT