காரைக்காலில் செவ்வாய்க்கிழமை (நவ.29) மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு போட்டிகள் நடைபெறவுள்ளன.
இதுகுறித்து காரைக்கால் சமூக நலத் துறை உதவி இயக்குநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காரைக்கால் மாவட்டத்தில் சமூக நலத்துறை சாா்பில் டிசம்பா் 3-ஆம் தேதி மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு, கட்டுரை, பேச்சு, பாட்டு உள்ளிட்ட போட்டிகள் காரைக்கால் கோவில்பத்து அரசு உயா்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணி அளவில் தொடங்கவுள்ளன.
காரைக்கால் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அனைவரும் இப்போட்டிகளில் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.