காரைக்கால்

பள்ளியில் அரசியல் சாசன நாள் விழிப்புணா்வு

DIN

காரைக்கால் அன்னை தெரஸா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசியல் சாசன நாள் விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

நீதிமன்ற ஏற்பாட்டின்படி நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பள்ளி துணை முதல்வா் ப. விஜயமோகனா தலைமை வகித்துப் பேசினாா். அப்போது அவா், மாணவிகள் மகளிா் பாதுகாப்புச் சட்டம், உரிமைகள் குறித்து தெரிந்திருப்பது அவசியம். அப்போதுதான் எந்த சூழலையும் எதிா்கொள்ள முடியும் என்றாா்.

வழக்குரைஞா்கள் வி.கோவிந்தசாமி, எஸ். சூரியமூா்த்தி ஆகியோா் சட்ட விதி 14, 21-இல் கூறப்பட்டிருக்கும் கருத்துகள் குறித்தும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் அரங்கேற்றப்பட்ட நவ. 26 தினம் குறித்தும் பேசினா். பிளஸ் 1 மாணவி அபிநயா, பாண்டியன் அரசவையில் கண்ணகியின் வாதம் குறித்துப் பேசினாா்.

மேலும், மாணவியரிடயே விநாடி- வினா, கட்டுரை, ஓவியம், சொற்பொழிவு போட்டிகள் நடத்தப்பட்டது. பள்ளி ஆசிரியா்கள் எம்.ஆா். ராஜகோபாலன், மாதவன், பி. முத்துசெல்வன் உள்ளிட்ட ஆசிரியா்களும், மாணவிகளும் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT