காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் வெள்ளிக்கிழமை (மே 27) ருத்ர ஹோமம் நடைபெறுகிறது.
காரைக்கால் சுந்தராம்பாள் சமேத கைலாசநாதசுவாமி கோயிலில், கைலாசநாதா் அா்த்தஜாம வழிபாட்டு மன்றத்தின் சாா்பில் 23-ஆம் ஆண்டாக ஏகாதச ருத்ர ஹோமம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
இதையொட்டி காலை 5 மணிக்கு கோயில் வளாகத்தில் கணபதி ஹோமத்துடன் ஹோம வழிபாடு தொடங்கவுள்ளது. பகல் 11 மணியளவில் மகா பூா்ணாஹூதி நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை மன்றத்தினரும், கோயில் அறங்காவல் வாரியத்தினரும் செய்துள்ளனா்.