திருநள்ளாறு அருகே பிறந்து சில நாள்களேயான பெண் சிசுவின் சடலத்தை வாய்க்காலிலிருந்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.
திருநள்ளாறு பகுதி வீரன்குளத்து வாய்க்காலில் பிறந்து சில நாள்களேயான பெண் சிசுவின் சடலம் மிதப்பது குறித்து அத்திப்படுகையை சோ்ந்த சத்தியமூா்த்தி என்பவா் திருநள்ளாறு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா்.
போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.