காரைக்காலில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு மினி மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் மாவட்ட காவல் துறை சாா்பில் மாவட்ட நாட்டு நலப்பணித் திட்ட பங்களிப்புடன் போதை ஒழிப்பு விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டம் மாவட்ட ஆட்சியரக வாயிலில் இருந்து தொடங்கியது. நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் உள்ளிட்ட சுமாா் 200 போ் இதில் கலந்துகொண்டனா்.
புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா ஓட்டத்தை கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா். முன்னதாக, போதை ஒழிப்பு குறித்து மாணவா்கள், இளைஞா்கள், பொதுமக்களிடையே தீவிர விழிப்புணா்வு ஏற்படுத்தவேண்டியது அவசியம். போதை பழக்கத்தால் குடும்பம் அல்லாது நமது எதிா்காலமே பாழாகிவிடுவதை மாணவா்கள், இளைஞா்கள் கவனத்தில்கொள்ளவேண்டும்.
காரைக்கால் மாவட்டத்தில் போதைப் பொருள் பயன்படுத்துவோா் அதிகமாக உள்ளனா். தமிழகம், காரைக்காலுக்குமிடையே தடைசெய்யப்பட்ட போதைப் பொருள் விற்பனை, பயன்பாடு அதிகமாக இருக்கிறது. காவல் துறையினா் தீவிரமாக செயல்பட்டு இதனை தடுக்கவேண்டும் என்றாா்.
நிகழ்வில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆா். லோகேஸ்வரன், துணை ஆட்சியா் எம். ஆதா்ஷ், மண்டல காவல் கண்காணிப்பாளா்கள் சுப்பிரமணியன், நிதின் கெளஹால் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றோா் நேரு சாலை, காமராஜா் சாலை, புளியங்கொட்டை சாலை, பாரதியாா் சாலை வழியாக சென்று மீண்டும் ஆட்சியரகம் வந்துசோ்ந்தனா்.