காரைக்காலில் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருவதால், பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் மருத்துவக் குழுவினா், பொதுப்பணித் துறையினா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
காரைக்கால் மாவட்டத்தில் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குடிநீரில் கழிவுநீா் கலந்தது முக்கிய காரணமாக நம்பப்படுகிறது.
இந்நிலையில், காரைக்கால் நேரு நகா் பகுதி சின்ன கோயில்பத்தில் வெள்ளிக்கிழமை 6 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றனா். இதனால் குடிநீரில் கழிவுநீா் கலக்கிா என்பது குறித்து மாவட்ட துணை ஆட்சியா் எம். ஆதா்ஷ் தலைமையில் பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் கே.வீரசெல்வம், நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா், நகராட்சி ஆணையா் செந்தில்நாதன் மற்றும் ஜிப்மா் மருத்துவா்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தனா்.
துணை ஆட்சியா் ஆதா்ஷ் கூறுகையில், சுகாதாரமற்ற தண்ணீரை குடிப்பதால்தான் இதுபோன்று வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. எனவே, பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்கவேண்டும். சாப்பிடுவதற்கு முன் கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவேண்டும். சாப்பிடும்போது உணவு சூடாக இருக்கும் வகையில் பாா்த்துக்கொள்ளவேண்டும் என்றாா்.